முக்கிய அறிவிப்பு! ரயில்கள் எழும்பூர் செல்லாது, தாம்பரத்தில் இருந்தே புறப்படும்

Estimated read time 1 min read

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகளால் சில ரயில்கள் தாம்பரத்தில் இருந்து புறப்படும் எனவும் தாம்பரம் வரையே வருகை தரும் எனவும் தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

சென்னை – திருச்சி மலைக்கோட்டை விரைவு ரயில் வரும் 11ம் தேதி முதல் நவம்பர் 10ம் தேதி வரை தாம்பரத்தில் இருந்து புறப்படும். மறுமார்க்கமாகவும் தாம்பரம் வரை மட்டுமே இயங்கும். மதுரை – சென்னை பாண்டியன் விரைவு ரயில் வரும் 10ம் தேதி முதல் நவம்பர் 9ம் தேதி வரை தாம்பரம் வரை மட்டுமே இயங்கும். எனினும், எழும்பூரில் இருந்து புறப்பாடு மாற்றமில்லை.

சென்னை – திருச்சி சோழன் விரைவு ரயில் வரும் 11ம் தேதி முதல் நவம்பர் 10ம் தேதி வரை தாம்பரத்தில் இருந்து புறப்படும். எனினும், மறுமார்க்கமாக எழும்பூர் வரை இயங்கும்

  • சென்னை – ராமேஸ்வரம் விரைவு ரயில் வரும் 11ம் தேதி முதல் நவம்பர் 10ம் தேதி வரை தாம்பரத்தில் இருந்து புறப்படும். மறுமார்க்கமாகவும் தாம்பரம் வரை மட்டுமே இயங்கும்.
  • சென்னை – மும்பை விரைவு ரயில் வரும் 11ம் தேதி முதல் நவம்பர் 10ம் தேதி வரை கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும். மறுமார்க்கமாக வழக்கம் போல எழும்பூர் வரை இயங்கும்.
Please follow and like us:

You May Also Like

More From Author