கோடியக்கரை பறவைகள் சரணாலயத்திற்கு வெளிநாட்டு பறவைகள் வருகை அதிகரித்துள்ளது.
பறவைகளின் நூழைவு வாயில் என்று அழைக்கப்படும் கோடியக்கரை சரணாலயத்திற்கு அக்டோபர் முதல் மார்ச் வரை வெளிநாட்டுப் பறவைகள் வந்து செல்வது வழக்கம். இந்நிலையில் வடகிழக்கு பருவமழை காரணமாக கோடியக்கரையில் அதிகளவில் மழைநீர் தேங்கியுள்ளது.
இதனால் செங்கால் நாரை, கூழைக்கிடா, பூநாரை, கடல்காகம் உள்ளிட்ட இன பறவைகள் ஆயிரக்கணக்கில் வந்து குவிந்துள்ளன. இதனை சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்.
