ஸ்ரீரங்கம் நம்பெருமாளின் தங்கையான சமயபுரம் மாரியம்மனுக்கு சீர்வழங்கும் வைபவம் விமர்சை!

Estimated read time 0 min read

ஸ்ரீரங்கம் நம்பெருமாளின் தங்கையான சமயபுரம் மாரியம்மனுக்கு சீர்வழங்கும் வைபவத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

ஆண்டுதோறும் தைமாதத்தில் ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி கோயிலில் இருந்து சமயபுரம் மாரியம்மனுக்கு சீர்வழங்கும் வைபவம் நடைபெறுவது வழக்கம்.

அதன்படி, கோயிலில் இருந்து பல்லக்கில் புறப்பட்ட நம்பெருமாள் கொள்ளிடம் காவிரியில் தீர்த்தவாரி கண்டருளிய பின் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

இதனை தொடர்ந்து, அம்மனுக்கு பட்டு புடவைகள், மஞ்சள், குங்குமம், வளையல் உள்ளிட்ட மங்கலப் பொருட்கள் கோயில் யானை மீது ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு சமயபுரம் கோவில் இணை ஆணையரிடம் வழங்கப்பட்டது.

இதனை அடுத்து, சமயபுரம் மாரியம்மனுக்கு பட்டுப்புடவை அணிவிக்கப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

Please follow and like us:

You May Also Like

More From Author