இண்டிகோ நிறுவனம் பிப்ரவரி 28 ஆம் தேதி வரை திபிலிசி (ஜார்ஜியா), அல்மாட்டி (கஜகஸ்தான்), பாகு (அஜர்பைஜான்) மற்றும் தாஷ்கண்ட் (உஸ்பெகிஸ்தான்) ஆகிய இடங்களுக்கு செல்லும் சர்வதேச விமான சேவைகளை நிறுத்தி வைத்துள்ளது.
மத்திய கிழக்கில் நிலவும் புவிசார் அரசியல் சூழ்நிலை, குறிப்பாக ஈரானை சுற்றியுள்ள அரசியல் பதட்டங்கள் ஆகியவை இந்த முடிவுக்குக் காரணம் என்று விமான நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
பயணிகள் மற்றும் பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த நாடுகளுக்கான விமானங்களை பிப்ரவரி 28 வரை இண்டிகோ நிறுத்தி வைத்துள்ளது
