இஸ்ரேல் நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் இணைந்து கூட்டாகச் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது காசா விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாட்டை அவர் மீண்டுமொருமுறை உறுதிப்படுத்தினார்.
செய்தியாளர் சந்திப்பில் பேசிய பிரதமர் மோடி, “எந்தவொரு மோதலுக்கும் மனிதநேயம் பலியாகிவிடக் கூடாது என்பதில் இந்தியா உறுதியாக உள்ளது. ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சில் (UNSC) அங்கீகரித்துள்ள ‘காசா அமைதித் திட்டம்’ இப்பகுதியில் நிலையான அமைதியை ஏற்படுத்த ஒரு சிறந்த வழியாகும். இந்தத் திட்டத்திற்கு இந்தியா தனது முழு ஆதரவைத் தெரிவிக்கிறது,” என்று கூறினார்.
இஸ்ரேல் -காசா விவகாரம்:அமைதித்தீர்வு மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு குறித்து பிரதமர் மோடி பேச்சு
