முழு அரசு மரியாதை உடன் பாடகி எஸ்.ஜானகி உடல் தகனம்

Estimated read time 1 min read

கனியணஹூண்டியில் பண்ணை தோட்டத்தில் பாடகி எஸ்.ஜானகி உடலுக்கு முழு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடைபெற்றது.

மகாராஜா கல்லூரியில் வைக்கப்பட்டிருந்த பாடகி எஸ்.ஜானகியின் உடலுக்கு மக்கள் அஞ்சலி செலுத்தினர். மக்கள் அஞ்சலிக்கு பிறகு ஜானகியின் உடல் ஊர்வலமாக கனியணஹூண்டியில் பண்ணை தோட்டத்துக்கு எடுத்து செல்லப்பட்டது. அங்கு அவரது உடலுக்கு முழு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடைபெற்றது. இறுதிச்சடங்கில் ஜானகி குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் திரையுலகினர் பங்கேற்றனர். 30 குண்டுகள் முழங்க அரசு மரியாதை முடிந்த பின் பண்ணை தோட்டத்தில் ஜானகி உடல் தகனம் செய்யப்பட்டது.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பல மொழிகளிலும் சேர்த்து 45,000 க்கும் அதிகமான பாடல்களைப் பாடியிருக்கும் பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி. கர்நாடக மாநிலம் மைசூரில் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி நேற்று காலமானார். தென்னிந்தியாவின் இசையரசியான இவர், சிறந்த பின்னணி பாடகியாக 4 தேசிய விருதுகள், 33 வெவ்வேறு மாநில திரைப்பட விருதுகளை பெற்றுள்ளார். தாமதமாக வழங்கப்பட்டதாக கூறி தனக்கு வந்த ‘பத்ம பூஷன்’ விருதை ஏற்க மறுத்தார் என்பது குறிப்பிடதக்கது.

You May Also Like

More From Author