திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் பங்குனி உற்சவப் பெருவிழா விமரிசையாக நடைபெற்று வருகிறது.
அறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் கடந்த 23-ம் தேதி பங்குனித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஏப்ரல் 3-ம் தேதி முருகப்பெருமானுக்கு பட்டாபிஷேகமும், 4-ம் தேதி திருக்கல்யாண வைபவமும் நடைபெற உள்ளது.
அதற்கான ஏற்பாடுகள் சிறப்பாக நடைபெற்று வரும் நிலையில், முருகப்பெருமான், வெள்ளி பூத வாகனத்தில் எழுந்தருளி வீதியுலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.இதில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
