300 ஆண்டுகால விசித்திர நடைமுறை.. வியப்பூட்டும் ஆன்மீக உண்மை..!!” 

Estimated read time 0 min read

ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ஜெகந்நாத் கோவிலில், சுமார் 300 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு விசித்திரமான ஆன்மீகத் தாத்பரியம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

ஒவ்வொரு ஆண்டும் ஜேஷ்ட பூர்ணிமா திருநாளின் போது, கடுமையான கோடைக் வெப்பத்தைத் தணிக்கப் பகவானுக்கு 51 புனித நீர் கலசங்கள் மற்றும் பஞ்சாமிர்தம் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்படுகிறது.

அதன் பிறகு, சுமார் 200 கிலோ மாம்பழச் சாறு நைவேத்தியமாகப் படைக்கப்படுகிறது. குளிர்ந்த நீர் அபிஷேகத்திற்குப் பின் மாம்பழச் சாற்றை அருந்துவதால், பகவான் அசதி அல்லது உடல்நலக்குறைவு நிலைக்கு ஆளாவதாக நம்பப்படுகிறது.

இதன் காரணமாக, பகவான் ஓய்வெடுத்துக் குணமடைவதற்காக 14 நாட்களுக்குக் கோவிலின் நடை முழுமையாகச் சாத்தப்பட்டு, அவருக்கு ‘மருத்துவ விடுப்பு’ அளிக்கப்படுகிறது.

இந்த 14 நாட்களிலும் பகவானின் ஓய்வுக்கு எந்தவொரு இடையூறும் ஏற்படக் கூடாது என்பதற்காகக் கோவிலில் உள்ள மணிகள் மற்றும் ஜாலராக்கள் அனைத்தும் துணிகளால் மூடி வைக்கப்படுகின்றன.

இந்தத் தற்காலிக நடை சாத்தலின் போது, பூசாரிகள் தினமும் இறைவனுக்கு மூலிகைச் சாறுகளைப் பத்திய உணவாகப் படைத்து, அவரின் ஆரோக்கியத்தைப் பக்குவமாகப் பராமரித்து வருகின்றனர்.

சுமார் 350 ஆண்டுகளுக்கு முன்பு தென்னிந்தியாவைச் சேர்ந்த மகாராஜ் அப்லாச்சாரி சுவாமி என்பவரால் இந்தத் திருத்தலம் தோற்றுவிக்கப்பட்டது.

போக்குவரத்து வசதிகள் குறைவாக இருந்த அந்தக் காலத்தில், ஒடிசாவின் பூரி ஜெகந்நாதர் கோவிலுக்குச் செல்ல முடியாத ஹாடோதி பிராந்திய பக்தர்களுக்காகக் கோட்டாவின் ராம்புரா பகுதியில் இந்த ஜெகதீஷ் கோவில் நிறுவப்பட்டது. இங்கு ஜெகந்நாதர், பலராமர் மற்றும் சுபத்ரா தேவியின் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.

Please follow and like us:

You May Also Like

More From Author