விண்வெளி ஆய்வு வரலாற்றில் ஏப்ரல் 3, 2026 அன்று ஒரு மிகமுக்கியமான மைல்கல் எட்டப்பட்டுள்ளது.
நாசாவின் ‘ஆர்ட்டெமிஸ் 2’ விண்வெளிப் பயணத்தில் இடம்பெற்றுள்ள விண்வெளி வீராங்கனை கிறிஸ்டினா கோச், பூமியிலிருந்து அதிக தூரம் பயணித்த பெண் என்ற வரலாற்றுச் சாதனையை அதிகாரப்பூர்வமாகப் படைத்துள்ளார்.
இண்டெக்ரிட்டி என்று பெயரிடப்பட்ட ஓரியன் விண்கலம், பூமியின் சுற்றுப்பாதையை விட்டு வெளியேறி நிலவை நோக்கித் தனது பயணத்தைத் தொடர்ந்த போது இந்தச் சாதனை நிகழ்த்தப்பட்டது.
இதற்கு முன்பு விண்வெளிக்குச் சென்ற பெண்கள் அனைவரும் பூமியின் கீழ்மட்டச் சுற்றுப்பாதையிலேயே தங்கியிருந்த நிலையில், கிறிஸ்டினா கோச் அந்த எல்லைகளைத் தாண்டி ஆழ்கடல் விண்வெளிக்குச் சென்று புதிய சரித்திரம் படைத்துள்ளார்.
பூமியிலிருந்து அதிக தூரம் பயணித்த முதல் பெண்! விண்வெளியில் புதிய வரலாறு
