இந்தியாவின் போக்குவரத்து கட்டமைப்பை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் நோக்கில், மூன்று புதிய புல்லட் ரயில் வழித்தடங்களுக்கான விரிவான திட்ட அறிக்கைகளை (DPR) வரும் மார்ச் 2027-க்குள் முடிக்க ரயில்வே அமைச்சகம் இலக்கு நிர்ணயித்துள்ளது.
2026-27 மத்திய பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்த இந்தத் திட்டங்கள், தென்னிந்தியா மற்றும் வடகிழக்கு மாநிலங்களுக்கிடையேயான பயண நேரத்தை அதிரடியாகக் குறைக்கவுள்ளன.
இது நனவாகும் பட்சத்தில், இந்தியாவின் நீண்ட தூரப் பயணங்கள் சில மணிநேரங்களாகக் குறையும்.
இது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் தொழில் நுட்ப மேன்மைக்கும் ஒரு புதிய உத்வேகத்தைத் தரும்.
இந்தியாவில் புல்லட் ரயில்: 2027-க்குள் 3 புதிய வழித்தடங்களுக்கான DPR தயார்!
