திமுக வார் ரூமில் ஓய்வு பெற்ற காவல்துறை உயரதிகாரிகள்!

Estimated read time 0 min read

திமுகவின் வார் ரூம் எனும் கட்டளை மையத்தில் ஓய்வு பெற்ற போலீஸ் உயர் அதிகாரிகள் பணியாற்றுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

தேர்தல் சமயத்தில் யதார்த்தமான கள நிலவரத்தை கண்காணித்து, அவசர சூழல்களில் தாமதங்களை தவிர்த்து, உடனடியாக முடிவு எடுப்பது மிக அவசியம். அதுபோல, வெவ்வேறு இடங்களில் இருந்து வரும் தகவல்களை திரட்டி, தாமதமின்றி பகுப்பாய்வு செய்து, உரிய நடவடிக்கை எடுப்பதும் முக்கியம்.

முக்கிய முடிவுகள் எடுப்பவர்கள், அதை உடனே நிறைவேற்றும் திறமை மிக்கவர்கள், தொழில்நுட்ப வல்லுனர்கள் ஆகியோர் ஒரே நேர்கோட்டில் இணைந்து பணிபுரிவது அவசியம். இது போன்ற பணிகளில், ஏற்கனவே பயிற்சி பெற்ற ஓய்வுபெற்ற போலீஸ் உயர் அதிகாரிகளின் உதவியை, திமுகவின் கட்டளை மையம் நாடி உள்ளது. அதன்பேரில் ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரிகளும், அந்த மையத்தில் ஐக்கியமாகி உள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல் அனுபவம் வாய்ந்த மூத்த பத்திரிகையாளர்களும் பணியாற்றுவதாக கூறப்படுகிறது.

Please follow and like us:

You May Also Like

More From Author