தெற்காசியாவின் மிகப்பெரிய தனியார் ஏவுகணை உற்பத்தி வளாகம் – மத்திய பிரதேசத்தில் அடிக்கல்!

Estimated read time 1 min read

மத்தியப் பிரதேச மாநிலம் சிவ்புரியில், தெற்காசியாவின் மிகப்பெரிய தனியார் ஏவுகணை உற்பத்தி வளாகத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.

மத்தியப் பிரதேசத்தின் சிவ்புரி மாவட்டத்தில், அதானி DEFENCE AND AEROSPACE நிறுவனம், 2 ஆயிரத்து 500 கோடி ரூபாய் முதலீட்டில் தெற்காசியாவின் மிகப்பெரிய தனியார் ஏவுகணை உற்பத்தி வளாகத்தை அமைக்கிறது.

இதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா மற்றும் மத்தியப்பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்த ஒருங்கிணைந்த வளாகத்தில், நடுத்தர மற்றும் நீண்ட தூர ஏவுகணைகள், அவற்றுக்குத் தேவையான திட எரிபொருள் மற்றும் வெடிபொருட்கள் உள்ளிட்டவை ஒரே இடத்தில் உற்பத்தி செய்யப்பட உள்ளன.

மேலும், இந்தத் திட்டத்தின் மூலம் சுமார் 5 ஆயிரம் பேருக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகள் உருவாகும் என்றும், உள்நாட்டு பாதுகாப்பு உற்பத்தியை வலுப்படுத்தி, ‘ஆத்மநிர்பர் பாரத்’ இலக்கை முன்னெடுக்க இந்த வளாகம் முக்கிய பங்காற்றும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

==

You May Also Like

More From Author