எல்.என்.ஜி இயற்கை எரிவாயு விநியோக கட்டுப்பாடு திரும்ப பெற்றது மத்திய அரசு!

Estimated read time 0 min read

எல்.என்.ஜி. எனப்படும் திரவ இயற்கை எரிவாயு விநியோகத்தின் மீது விதிக்கப்பட்டிருந்த அவசரகால கட்டுப்பாடுகளை, மத்திய அரசு திரும்பப் பெற்றுள்ளது.

மேற்கு ஆசிய மோதலால் ஹோர்முஸ் நீரிணை வழியாக எல்.என்.ஜி. கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, கடந்த மார்ச் மாதம் இயற்கை எரிவாயு விநியோகத்திற்கு மத்திய அரசு அவசரகால கட்டுப்பாடுகளை விதித்திருந்தது.

தற்போது போர் நிறுத்தம் அமலுக்கு வந்ததை அடுத்து, ஹோர்முஸ் நீரிணை வழியாக எல்.என்.ஜி. விநியோகம் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளதால், அந்த கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளன.

இதற்கான அறிவிப்பை மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இதன் மூலம் உள்நாட்டில் உற்பத்தியாகும் இயற்கை எரிவாயு மற்றும் இறக்குமதி செய்யப்படும் எல்.என்.ஜி. விநியோகம் மீண்டும் வழக்கமான நடைமுறையின்படி மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

You May Also Like

More From Author