இந்தியாவின் விண்வெளிப் பயணத்தில் ஒரு புதிய வரலாற்று சிறப்புமிக்க அத்தியாயம் எழுதப்பட்டுள்ளது.
ஹைதராபாத்தை சேர்ந்த விண்வெளி ஸ்டார்ட்அப் நிறுவனமான ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ், இந்தியாவின் முதலாவது தனியார் சுற்றுப்பாதை கிளாஸ் ராக்கெட்டான விக்ரம்-1 ஐ மிஷன் ஆகமன் என்ற திட்டத்தின் கீழ் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளது.
ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து ஏவப்பட்ட இந்த ராக்கெட், தனது இறுதி உந்துதல் கட்டங்களை முடித்துத் திட்டமிட்ட சுற்றுப்பாதையை வெற்றிகரமாக அடைந்துள்ளது.
இதன் மூலம் அமெரிக்கா மற்றும் சீனாவிற்கு அடுத்தபடியாகத் தனியார் நிறுவனங்கள் மூலம் விண்கலத்தை சுற்றுப்பாதைக்கு அனுப்பிய உலகின் 3வது நாடு என்ற அசாத்திய பெருமையை இந்தியா பெற்றுள்ளது.
விக்ரம்-1 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது!
