பாலைவனமயமாக்கத்தைச் சமாளிப்பதில் உறுதியாகப் பங்களிக்கும் சீனா, முக்கிய தலைவராகும் என்று ஐ.நா துணைத் தலைமைச் செயலாளரும், பாலைவனமயமாக்கத்தைத் தடுத்துக் கட்டுப்படுத்தும் ஐ.நாவின் பொது ஒப்பந்தத்தின் செயலகத்தின் நிர்வாகச் செயலாளருமான யாஸ்மின் ஃபுவாத் அண்மையில் சிஜிடிஎன் நிறுவனத்துக்குப் பேட்டியளித்த போது தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில், நிலம் மலடாகு நிலைமை, வறட்சி மற்றும் பாதுகாப்புடன் நெருக்கிய தொடர்புடையது. இது மிக கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும். நிலம் மலடாகு நிலைமை மற்றும் வறட்சியைச் சமாளிப்பதற்காக முதலீடு செய்வது, அமைதி, நிதானம் மற்றும் பாதுகாப்பில் முதலீடு செய்வதற்கு இணையாகும். தனிநபர் வாரியங்கள் முதலீட்டில் கலந்து கொள்வதை ஊக்குவித்து, வறட்சியால் ஏற்படுத்தும் பாதிப்பைக் குறைக்கும் வகையில், பாலைவனமயமாக்கத்தைத் தடுத்துக் கட்டுப்படுத்தும் ஐ.நாவின் பொது ஒப்பந்தத்தின் 17ஆவது ஒப்பந்த தரப்புகளின் மாநாடு ஒரு முறைமையை முன்வைக்கும் என்று தெரிவித்தார்.
