தேர்தல் கருத்துக்கணிப்புகள் பாஜகவுக்கு சாதமாக வந்ததை அடுத்து பங்குச் சந்தையில் பெரும் முன்னேற்றம் 

பாஜக தான் வெற்றி பெறும் என்று கூறும் பொது தேர்தல் கருத்துக்கணிகள் வெளியாகி இரண்டு நாட்கள் ஆகும் நிலையில், பங்குச் சந்தை இன்றைய ஆரம்ப வர்த்தகத்தில் பெரும் முன்னேற்றத்தை பதிவு செய்துள்ளது.
அரசியல் ஸ்திரத்தன்மையின் நம்பிக்கையில் இந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இன்று காலை 30-பங்குகளின் சென்செக்ஸ் 2,000 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்தது.
அதே நேரத்தில் 50-பங்குகள் கொண்ட நிஃப்டி நான்கு ஆண்டுகள் இல்லாத மிகப்பெரிய முன்னேற்றத்தை பதிவு செய்துள்ளது.
மும்பை பங்குச் சந்தை மற்றும் தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண்களான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி இரண்டும் இன்று அதிகபட்ச உச்சத்தை எட்டின.

Please follow and like us:

You May Also Like

More From Author