நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் (என்எல்சி) இந்திய அரசுக்கு சொந்தமாக உள்ள பங்குகளை மேலும் விற்பனை செய்ய முடிவு செய்திருப்பதற்குத் தமிழ்நாடு அரசு தனது கொள்கை ரீதியான கடுமையான ஆட்சேபனையைத் தெரிவித்துள்ளது.
இந்த விவகாரத்தில் மத்திய அரசு தனது முடிவை உடனடியாக மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி, பிரதமர் நரேந்திர மோடிக்குத் தமிழக முதல்வர் ச.ஜோசப் விஜய் இன்று (ஜூன் 25) விரிவான அவசரக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
வழக்கமாக ஒன்றிய அரசு எனக் குறிப்பிட்டு வந்த முதல்வர் விஜய், தற்போது அதை மாற்றி இந்திய அரசு எனக் குறிப்பிட்டிருப்பதும் பேசுபொருளாகியுள்ளது.
என்எல்சி பங்கு விற்பனையை நிறுத்துக; ஒன்றிய அரசுக்கு பதில் இந்திய அரசு எனக் குறிப்பிட்டு பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்
