ஆந்திர முதல்வராக பதவியேற்றார் சந்திரபாபு நாயுடு: பவன் கல்யாணுக்கு துணை முதல்வர் பதவி

Estimated read time 1 min read

ஆந்திர முதல்வராக தெலுங்கு தேசம் கட்சி(டிடிபி) தலைவர் என் சந்திரபாபு நாயுடு இன்று பதவியேற்றார்.
அவருடன் ஜனசேனா தலைவர் பவன் கல்யாண் உட்பட 25 அமைச்சர்களும் இன்று பதவியேற்றனர்.
பவன் கல்யாணுக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
விஜயவாடா, கன்னவரம் விமான நிலையம் அருகே உள்ள கேசரப்பள்ளி ஐடி பூங்காவில் இன்று நடைபெற்ற பதவியேற்பு விழாவில், அம்மாநில ஆளுநர், சந்திரபாபு நாயுடுவுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
சந்திரபாபு நாயுடுவின் பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ஜே.பி.நட்டா, ராஜ்நாத்சிங், NDA கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள், பீகார் முதல்வர் நிதிஷ்குமார், ராஜஸ்தான் முதல்வர், உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர்சிங் தாமி, மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே ஆகியோர் கலந்து கொண்டனர்.

Please follow and like us:

You May Also Like

More From Author