சீன-கசகஸ்தான் கூட்டாளியுறவில் புதிய உயிராற்றல்

Estimated read time 1 min read

சீனாவும், கசகஸ்தானும் நிரந்தரப் பன்முக நெடுநோக்கு கூட்டாளிகளாகும். சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் ஜுலை 2ம் நாள் முதல் 4ம் நாள் வரை கசகஸ்தானில் அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ளார். பயணத்தின் போது இரு நாட்டு அரசுத் தலைவர்கள், பேச்சுவார்த்தை நடத்தி, கூட்டறிக்கையில் கையொப்பமிட்டனர்.

அதற்குப் பின் இருநாட்டுத் தலைவர்களின் தலைமையை வழிக்காட்டலாகக் கொண்டு, தலைமுறை நட்புறவு, ஒன்றுக்கு ஒன்று நம்பிக்கை, இன்பத்துன்பங்களைப் பகிர்ந்து கொள்வது, செழுமையைக் கூட்டாக அனுபவிப்பது ஆகியவற்றை உள்ளடக்கிய பொது எதிர்காலச் சமூகத்தைக் கட்டியமைப்பதை முன்னேற்ற வேண்டும் என்று தெரிவித்தனர்.


சீன-கசகஸ்தான் ஒத்துழைப்பின் அடிப்படையானது, ஒன்றுக்கு ஒன்று அரசியல் நம்பிக்கையாகும். உறுதியான நம்பிக்கை மற்றும் ஆதரவு, இரு நாட்டு ஒத்துழைப்புக்கான மிக வலுவான அரசியல் உத்தரவாதமாக மாறியுள்ளன. மேலும், சீன-கசகஸ்தான் ஒத்துழைப்பின் உந்து சக்தியானது, பொருளாதார மற்றும் வர்த்தகம் ஆகும். மேலதிக ஒத்துழைப்பு, மக்களின் மனத்தை ஒன்றிணைத்து, தலைமுறை நட்புறவை மேலும் முன்னெடுக்கும்.
இதனிடையில், பல தரப்பு அமைப்பின் கட்டுக்கோப்புக்குள் இருநாடுகளுக்கு இடையிலான தொடர்பு மற்றும் ஒத்துழைப்பை நெருக்கமாக்க வேண்டுமென இரு நாட்டு அரசுத் தலைவர்கள் வலியுறுத்தினர். உலக அமைதி, வளர்ச்சி மற்றும் உண்மையான பலதரப்புவாதத்தை இது பேணிக்காக்கும்.
படம்:VCG

Please follow and like us:

You May Also Like

More From Author