கொழும்பில் கலாச்சார நல்லிணக்கத்தைக் கொண்டாடிய சீன, இலங்கை இசைக் கலைஞர்கள்


சர்வதேச நாகரிக தினத்தைக் கொண்டாடும் வகையில், கடந்த வாரத்தில் கொழும்பில் “உரையாடல் மற்றும் இணைப்பு” தொடர் இசை நிகழ்ச்சித் நடத்தப்பட்டது.
கொழும்பில் உள்ள தேவி பாலிகா வித்யாலயா பள்ளியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு இலங்கையில் உள்ள சீனக் கலாச்சார மையம் மற்றும் சர்வதேச கலாச்சாரம், சுற்றுலா பரிமாற்றங்களுக்கான சீன மையம் இணைந்து ஏற்பாடு செய்தன.

யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட சீனாவின் பாரம்பரியமான இசையை இதில் கலந்து கொண்ட 150 க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கண்டு, கேட்டு ரசித்தனர்.  இதையடுத்து கொழும்பு நகராட்சி மன்ற சதுக்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கொழும்பில் உள்ள கன்பூசியஸ் நிறுவன மாணவர்கள், மேற்கு மாகாண சபை, கொழும்பு மற்றும் கோட்டே நகராட்சி மன்ற அதிகாரிகள்  உட்பட 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

பாரம்பரிய சீன இசையமைப்புகள் பண்டைய மெல்லிசைகள், புதிய குரல்கள் என்ற கருப்பொருளின் கீழ், இலங்கை இசை மற்றும் நடன குழுவுடன் இணைந்து நடத்திய இந்த நிகழ்ச்சி கலாச்சார அதிர்வுகளை பிரதிபலித்தன. 10 சீன இசைக்கலைஞர்கள் கொண்ட குழு, கொங்ஹோ, எர்ஹு மற்றும் பிபா உள்ளிட்ட பாரம்பரிய இசைக்கருவிகளை இசைத்தனர்.

Please follow and like us:

You May Also Like

More From Author