கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை குறித்து தாமாக முன்வந்த உச்சநீதிமன்றம் எடுத்த முடிவு  

கடந்த சில தினங்களுக்கு முன்னர் நாட்டையே உலுக்கிய கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை விவகாரத்தில், அரசின் போக்கில் அதிருப்தி அடைந்த உச்ச நீதிமன்றம், தானாக இந்த வழக்கை விசாரிக்க முன்வந்துள்ளது.
இந்த விவகாரத்தில் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்ததுடன், இந்த வழக்கின் விசாரணை தலைமை நீதிபதியின் முன் நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது.
கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் முதுநிலை பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
மருத்துவரின் மரணத்துக்கு நீதி கேட்டு, சனிக்கிழமை நாடு முழுவதும் மருத்துவர்கள் 24 மணிநேர போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Please follow and like us:

You May Also Like

More From Author