ஜனவரி 6ஆம் நாள் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழுவின் உறுப்பினரும் வெளியுறவு அமைச்சருமான வாங் யீ நமீபியாவின் தலைநகரான விந்தூகைச் சென்றடைந்து புதிய ஆண்டில் முதலாவது ஆப்பிரிக்கப் பயணத்தைத் துவக்கினார்.
விரைவில் பதவியேற்கவுள்ள நமீபிய அரசுத் தலைவர் நைட்வா அம்மையாரைச் சந்தித்த போது வாங் யீ கூறுகையில், ஒவ்வொரு ஆண்டிலும் சீன வெளியுறவு அமைச்சரின் தனது முதல் வெளிநாட்டு பயணம் ஆப்பிரிக்காவுக்கு வர வேண்டும்.
இது சீனத் தூதாண்மையின் சிறந்த பாரம்பரிய மற்றும் தனித்துவமான சிறப்பாகும். இவ்வழக்கம் கடந்த 35 ஆண்டுகளாக நிலையானது. ஒருபோதும் மாறவில்லை. ஒருபோதும் அசைக்கவில்லை. சீனாவுக்கும் தூதாண்மை உறவு நிறுவப்பட்ட 53 ஆப்பிரிக்க நாடுகளுக்குமிடையிலான உறவு, நெடுநோக்கு உறவின் நிலைக்கு முழுமையாக உயர்த்தப்பட்டுள்ளது.
சீன-ஆப்பிரிக்கா உறவும் புதிய யுகத்தில் எல்லாக் காலங்களிலும் பொது எதிர்காலச் சமூகமாக தெளிவுப்படுத்தப்பட்டுள்ளது. சீனாவும் ஆப்பிரிக்காவும் ஒற்றுமையையும் ஒத்துழைப்பையும் வலுப்படுத்தி, வளரும் நாடுகளின் நியாயமான உரிமை நலனைக் கூட்டாகப் பேணிகாக்க வேண்டும்.
இது வரலாற்று நீதிக்கும் காலத்தின் போக்கிற்கும் சீனா மற்றும் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த 280 கோடி மக்களின் கூட்டு விருப்பங்களுக்கும் ஏற்ப உள்ளது என்றார்.