பாகிஸ்தானின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் பிலாவல் பூட்டோ, பயங்கரவாத அமைப்புகளுடனான பாகிஸ்தானின் கடந்தகால உறவுகளை பகிரங்கமாக ஒப்புக்கொண்டார்.
ஸ்கை நியூஸிடம் பேசிய பூட்டோ, “பாகிஸ்தானுக்கு ஒரு கடந்த காலம் இருக்கிறது என்பது ஒரு ரகசியம் என்று நான் நினைக்கவில்லை… இதன் விளைவாக, நாங்கள் பாதிக்கப்பட்டுள்ளோம், பாகிஸ்தான் பாதிக்கப்பட்டுள்ளது. தீவிரவாதத்தினை அலை அலையாக நாங்கள் கடந்து வந்துள்ளோம்” என்றார். “நாங்கள் எங்கள் பாடங்களையும் கற்றுக்கொண்டோம். இந்தப் பிரச்சினையைத் தீர்க்க உள் சீர்திருத்தங்களைச் செய்துள்ளோம்,” என்று அவர் மேலும் கூறினார்.
பயங்கரவாதக் குழுக்களுடன் தொடர்பு இருப்பதை ஒப்புக்கொண்ட பிலாவல் பூட்டோ
