இந்தியா-பாகிஸ்தான் விவகாரத்தில் ஐரோப்பாவின் பாசாங்குத்தனம்; விளாசிய எஸ்.ஜெய்சங்கர்  

Estimated read time 1 min read

ஐரோப்பாவின் சில பிரிவுகள் இந்தியாவுக்கு எதிராக ஒரு போதனை நிலைப்பாட்டை எடுத்துக்கொண்டு, அதே மதிப்புகளை ஐரோப்பாவில் நிலைநிறுத்தத் தவறிவிட்டதாக வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் கடுமையாக விமர்சித்தார்.
ஞாயிற்றுக்கிழமை (மே 4) ஆர்க்டிக் வட்ட இந்தியா மன்றத்தில் பேசிய ஜெய்சங்கர், “இந்தியா கூட்டாளர்களைத் தேடுகிறது, போதகர்களை அல்ல. மேலும் சர்வதேச உறவுகளில் பரஸ்பர மரியாதை மற்றும் யதார்த்தமான ஈடுபாடு முக்கியம்.” என வலியுறுத்தினார்.
“நாம் உலகைப் பார்க்கும்போது, ​​கூட்டாளர்களைத் தேடுகிறோம், போதகர்களை அல்ல – குறிப்பாக வெளிநாடுகளில் அவர்கள் பிரசங்கிப்பதை உள்நாட்டில் கடைப்பிடிக்காதவர்களை” என்று அவர் குறிப்பிட்டார்.
சில ஐரோப்பிய நாடுகள் இன்னும் அத்தகைய மனநிலையுடன் உள்ளன என அவர் கூறினார்.

You May Also Like

More From Author