பஹல்காமில் ஏப்ரல் 22-ஆம் தேதி நிகழ்ந்த பயங்கரவாதத் தாக்குதலில் 26 பேர், பெரும்பாலும் சுற்றுலா பயணிகள், உயிரிழந்த சம்பவத்திற்கு பதிலடியாக, இந்திய ராணுவம் “ஆபரேஷன் சிந்தூர்” என்ற பெயரிடப்பட்ட ஏவுகணை தாக்குதலை நடத்தியது.
இந்த நடவடிக்கை பிரதமர் நரேந்திர மோடியின் நேரடி கண்காணிப்பில் மேற்கொள்ளப்பட்டது என ஹிந்துஸ்தான் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த தாக்குதல்களில் பாகிஸ்தானும், பாகிஸ்தான் ஆக்கிரமித்த ஜம்மு-காஷ்மீரும் உள்ளடங்கிய பகுதிகளில் உள்ள ஒன்பது பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன.
தாக்குதலில் 26 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகவும், 55 பேர் காயமடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலக்குகளின் பட்டியலில் ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் பஹாவல்பூர் தலைமையகம் மற்றும் லஷ்கர் இ தொய்பாவின் முரிட்கே தலைமையகம் அடங்குகின்றன.
பிரதமர் மோடியின் நேரடி கண்காணிப்பில், தீவிரவாதிகளை குறிவைத்து நடத்தப்பட்ட ஆபரேஷன் சிந்தூர்
