பாகிஸ்தானின் லாகூரில் இருந்து அமெரிக்கர்கள் உடனடியாக வெளியேற அமெரிக்க அரசு அறிவுரை

Estimated read time 0 min read

இந்தியாவின் ட்ரோன் தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானின் லாகூரை விட்டு வெளியேற மற்றும் பாதுகாப்பான இடங்களில் தங்குமாறு தூதரக பணியாளர்கள், குடிமக்களுக்கு அமெரிக்கா அறிவுறுத்தியுள்ளது.

பாகிஸ்தானின் லாகூர் நகரில் உள்ள அமெரிக்க துணை தூதரகம், அனைத்து தூதரக ஊழியர்களையும் பாதுகாப்பான இடங்களில் தங்க அந்நாட்டு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. லாகூர் மற்றும் அதனை சுற்றி, ட்ரோன் தாக்குதல்கள், வான்வெளி ஊடுருவல்கள் பற்றிய தகவல்கள் வெளியானதன் காரணமாக உத்தரவிட்டுள்ளது.

மோதல்கள் நிறைந்த பகுதியில் இருக்கும் அமெரிக்க குடிமக்கள் பாதுகாப்பாக வெளியேற முடிந்தால் வெளியேறவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. வெளியேறுவது பாதுகாப்பானதாக இல்லாவிட்டால், அவர்கள் பாதுகாப்பான இடத்தில் தங்கியிருக்கவும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

அமெரிக்கர்கள் பாதுகாப்பான தங்குமிடத்தை தேடவேண்டும். அமெரிக்க அரசின் உதவியை சார்ந்திராமல் வெளியேற்ற திட்டங்களை வைத்திருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. லாகூரில் வான் பாதுகாப்பு அமைப்பை இந்தியா தகர்த்து, அழித்த நிலையில், லாகூரில் வான் வழி பதற்றம் உள்ளதால் உளவுத்துறை அடிப்படையில் அமெரிக்கா அறிவுறுத்தியுள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author