ஈரான் மீதான போர் விரைவில் முடிவுக்கு வரும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூட்டுப்படைகள் 12 நாட்களாக தாக்குதல் நடத்தி வருகின்றன. பதிலுக்கு ஈரானும் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை குறிவைத்து தாக்குவதுடன் ஹர்முஸ் நீர் வழித்தடத்தையும் முடக்கியுள்ளது.
இந்நிலையில், போர் நிலவரம் குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ஈரானில் இனி அழிப்பதற்கு எதுவும் இல்லை என்றும் போர் கூடிய விரைவில் முடிவுக்கு வரும் என்றும் உறுதி தெரிவித்தார். ஈரான் மீதான தாக்குதலில் பெரும்பாலான இலக்குகளை அடைந்துவிட்டோம் என்றும், இன்னும் ஒரு சில நடவடிக்கைகள் மட்டுமே மிஞ்சி இருப்பதாகவும் தெரிவித்தார்.
