தேசத்துக்குப் பணி செய்வது கட்சி விரோத செயலா எனக் காங்கிரஸ் தலைமைக்கு அக்கட்சியின் மூத்த தலைவரும், எம்பியுமான சசி தரூர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து பேசியுள்ள சசிதரூர், நாட்டின் நலனுக்காகச் சேவை செய்யும்போது, வெளியில் இருந்து கூறப்படும் கருத்துகளை ஒருவர் கண்டுகொள்ளவே கூடாது எனத் தெரிவித்துள்ளார்.
வெளிநாடுகளுக்கு தாங்கள் சுற்றுலாவுக்காக வரவில்லை என்றும், நாட்டின் ஒற்றுமைக்காக ஒன்றுக்கூடி வந்துள்ளதாகவும் சசி தரூர் கூறியுள்ளார்.