சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங், ஜுன் 5ஆம் நாளிரவு அழைப்பை ஏற்று, அமெரிக்க அரசுத் தலைவர் டிரம்புடன் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டார்.
இந்த உரையாடலின் போது, சீன-அமெரிக்க உறவின் வளர்ச்சி முன்னேற்றப் போக்கை இரு தரப்பும் சரியாகவும் சீராகவும் சரிப்படுத்த வேண்டும் என்றும் குறிப்பாக, சர்ச்சைகளைக் குறைத்துச் சமாளிக்க வேண்டியது மிகவும் முக்கியம் என்று ஷிச்சின்பிங் வலியுறுத்தினார்.
மேலும், அமெரிக்கத் தரப்பின் ஆலோசனையின்படி, இரு நாடுகளின் பொருளாதாரம் மற்றும் வர்த்தகம் தொடர்பான பிரதிநிதிக் குழுவினர்கள் ஜெனீவாவில் பேச்சுவார்த்தை நடத்தியதைச் சுட்டிக்காட்டிய அவர், பொருளாதார மற்றும் வர்த்தக பிரச்சினையைத் தீர்ப்பதற்கான முக்கிய நடவடிக்கையான இப்பேச்சுவார்த்தை, இரு நாடுகளின் பல்வேறு துறையினர்கள் மற்றும் சர்வதேச சமூகத்தின் பொது வரவேற்பைப் பெற்றுள்ளது.
பேச்சுவார்த்தை மற்றும் ஒத்துழைப்பு தான் சரியான தீர்வாக அமையும். ஏற்கனவே நிறுவப்பட்டுள்ள பொருளாதார மற்றும் வர்த்தக ஆலோசனை அமைப்புமுறையின் மூலம், நியாயமான மனப்பான்மையோடு, ஒன்றுக்கு ஒன்றுடனான கவனத்திற்கு மதிப்பளித்து, கூட்டு நலன்களை நனவாக்கப் பாடுபட வேண்டும்.
வெளியுறவு விவகாரம், பொருளாதாரம் மற்றும் வர்த்தகம், இராணுவப் படை முதலிய துறைகளின் பரிமாற்றங்களை இரு தரப்பும் வலுப்படுத்தி, ஒத்தக் கருத்துக்களை அதிகரித்து, தப்பெண்ணங்களைக் குறைத்து, ஒத்துழைப்புகளை வலுப்படுத்த வேண்டும் என்று ஷிச்சின்பிங் தெரிவித்தார். தைவான் பிரச்சினையை அமெரிக்கா கவனமாகக் கையாள வேண்டும் என்றும் ஷிச்சின்பிங் வலியுறுத்தினார்.
புதிய சுற்று பேச்சுவார்த்தையை வெகுவிரைவில் நடத்த வேண்டும் என்று இரு தரப்பினரும் ஒப்புகொண்டனர்.