ஆடிப்பெருக்கை முன்னிட்டு நீர்நிலைகளில் குவிந்த பக்தர்கள் – புனித நீராடி வழிபாடு!

Estimated read time 0 min read

ஆடிப்பெருக்கு தினத்தை ஒட்டி திருச்சியில் உள்ள அம்மா மண்டபத்தில் பக்தர்கள் புனித நீராடி சிறப்பு வழிபாடு நடத்தினர்.

காவிரி நீரை போற்றி வணங்கும் தினமான ஆடிப்பெருக்கு தினத்தை தமிழகம் முழுவதும் உள்ள மக்கள் கொண்டாடினர். அந்த வகையில் திருச்சியில் உள்ள அம்மா மண்டபத்தில் ஒன்று கூடிய பக்தர்கள் காவிரி நீரில் புனித நீராடினர்.

பின்னர் கரையோரத்தில் காவிரி தாய்க்கு மலர், பழங்கள் உள்ளிட்டவை படைத்து சிறப்பு வழிபாடு நடத்தினர். அதிகாலை முதலே வழிபாட்டை தொடங்கிய புது மணத்தம்பதிகள் தாலிக்கயிறு மாற்றி வழிபட்டனர்.

இதற்கிடையே காவிரியில் போதிய நீர்வரத்து இல்லாததால், பக்தர்கள் குளிப்பதற்காக மாவட்ட நிர்வாகம் சார்பில் தண்ணீர் குழாய்கள் அமைக்கப்பட்டிருந்தன. கூட்டம் அதிகரித்ததால் அம்மா மண்டபம் பகுதியில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

You May Also Like

More From Author