அண்மையில் பெய்ஜிங்கில் நடைபெற்ற சி.பி.டி.மன்றத்தின் 2025ஆம் ஆண்டு கூட்டத்தில் 40க்கும் மேலான நாடுகள் மற்றும் பிரதேசங்களைச் சேர்ந்த சுமார் 6 ஆயிரம் அரசியல், வணிகம் மற்றும் கல்வி துறையினர்கள் ஒன்று கூடியுள்ளனர். சீனாவின் வளர்ச்சி வாய்ப்புகளைப் பகிர்ந்து கொள்வது, பிரதிநிதிகள் பலரின் ஒத்த கருத்தாக மாறியுள்ளது.
பிரிட்டனின் சீன வணிகச் சங்கத்தின் மூத்த ஆலோசகரும், பிரிட்டன்-சீன வணிக வளர்ச்சி மையத்தின் இயக்குநகருமான ஜோன் மைக்லேன் கூறுகையில், பொருளாதார நிலைமை மேம்பட்டு வருவதை முன்னணி வணிகர்கள் உணர்ந்து கொள்கின்றனர். இந்த ஆக்கப்பூர்வமான சமிக்கையை மேலதிக பிரிட்டன் தொழில் நிறுவனங்களுக்கு அனுப்புவது எங்கள் பொறுப்பாகும் என்று தெரிவித்தார்.
பிரிட்டனின் அரச சான்றிதழ் பெற்ற ராயல் அளவையாளர் நிறுவனத்தின் தலைமை சந்தை அதிகாரி டோனி ஒசூடி, சீன சந்தையின் மீதான நம்பிக்கை குறித்து கூறுகையில், சீனாவின் வெளிநாட்டுத் திறப்பு கொள்கை எங்களைப் பொருத்தவரை முக்கியமானது. அது எங்களுக்கு அதிக வாய்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.