சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் அரசியல் குழுவின் நிரந்தர உறுப்பினரும், துணை தலைமையமைச்சருமான டிங் சுவைசியாங் ஜூன் 20ஆம் நாள் 28ஆவது செயின்ட் பீட்டர்ஸ்பர்க் சர்வதேச பொருளாதார மன்றத்தின் ஆண்டு கூட்டத்தில் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார்.
அப்போது அவர் கூறுகையில், பத்து ஆண்டுகளுக்கு முன்பு, சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் 70ஆவது ஐ.நா பேரவையின் பொது விவாதத்தில் பங்கெடுத்த போது நிகழ்த்திய உரையில், அமைதி, வளர்ச்சி, நேர்மை, நீதி, ஜனநாயகம், சுதந்திரம் ஆகியவை முழு மனித குலத்தின் பொது மதிப்பாகவும், ஐ.நாவின் உன்னத குறிக்கோளாகவும் உள்ளது என்ற கருத்தை முன்வைத்தார். அவரது இக்கருத்து, சர்வதேச சமூகத்தின் பரந்த ஆதரவைப் பெற்றுள்ளது. தற்போது மனித குலம், பல பொது அறைகூவல்களை எதிர்நோக்குகின்றது. முழு மனித குலத்தின் பொது மதிப்பில் ஊன்றி நின்று இதைப் பரவல் செய்து, அமைதி, பாதுகாப்பு, செழுமை மற்றும் முன்னேற்றம் ஆகியவை வாய்ந்த ஒளிவீசும் எதிர்காலத்தை நோக்கி உலகம் காலடி எடுத்து வைப்பதை முன்னேற்ற வேண்டும் என்று தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில், வெளியுறப் பாதிப்பு அதிகமாக இருந்த போதிலும், சீனப் பொருளாதாரம் இன்னமும் சீராக வளர்ந்து வருகிறது. உலகிற்கு வலுவான உயிராற்றலையும் மீள்தன்மையையும் காட்டுகிறது. வெளிப்புற சூழல் எவ்வாறு மாறினாலும், சீனாவின் வெளிநாட்டுத திறப்பு மென்மேலும் விரிவாகும். பன்னாட்டுத் தொழில் நிறுவனங்கள் சீனாவில் முதலீடு செய்து தொழில் நடத்தி, சீனாவின் வளர்ச்சி வாய்ப்புகளைப் பகிர்ந்து கொள்வதை வரவேற்கிறோம் என்று தெரிவித்தார்.