இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து மண்ணில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட துவங்கியுள்ளது.
அத்தொடரின் முதல் போட்டியில் இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. இத்தனைக்கும் அந்தப் போட்டியில் வரலாற்றிலேயே முதல் முறையாக இந்திய அணி 5 சதங்களை அடித்து சாதனை படைத்தது. ஆனால் லோயர் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ஃபினிஷிங் செய்ய தவறிதும் கேட்ச்களை விட்டதும் தோல்விக்கு காரணமானது.
அதனால் 1 – 0 என்ற கணக்கில் இந்தியா ஆரம்பத்திலேயே தொடரில் பின்தங்கியுள்ளது. இதையும் சேர்த்து கடைசி 9 போட்டிகளில் இந்தியா 8 தோல்விகளை சந்தித்துள்ளது. குறிப்பாக நியூசிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் ஒயிட் வாஸ் தோல்வியை சந்தித்த இந்தியா சவாலான ஆஸ்திரேலியாவில் 3 – 1 (5) என்ற கணக்கில் தோல்விகளை சந்தித்து 2025 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு தகுதி பெறாமல் வெளியேறியது.
ஹாட்ரிக் தோல்வி வருமா:
இந்நிலையில் இந்தியா 2வது போட்டியில் வென்றால் மட்டுமே தொடர் தோல்விகளை நிறுத்தி கம்பேக் கொடுத்து இங்கிலாந்துக்கும் பதிலடி கொடுக்க முடியும் என்று முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.
ஒருவேளை 2வது போட்டியிலும் தோற்றால் சவாலான இங்கிலாந்தில் கடைசி 3 வெல்வது அசாத்தியமானது என்றும் அவர் கூறியுள்ளார். அதனால் நியூஸிலாந்து, ஆஸ்திரேலிய தொடர்களை தொடர்ந்து இங்கிலாந்தையும் சேர்த்து இந்தியா ஹாட்ரிக் தோல்விகளை சந்திக்கும் என்று அவர் கவலை தெரிவித்துள்ளார்.
இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “இது விழுங்குவதற்கு மிகவும் கடினமான மாத்திரை. ஏனெனில் 3 – 0 என்ற கணக்கில் நியூசிலாந்திடம் தோற்ற நாம் ஆஸ்திரேலியாவிடமும் தோல்வியை சந்தித்தோம் என்று இப்போது தான் வர்ணனையாளர் அறையில் சொல்லி விட்டு வந்தேன். இங்கிலாந்து தொடர் மிகவும் கடினமானது. இங்கே இந்தியா 1 – 0 என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே முன்னிலை பெறுவதற்கு வாய்ப்பிருந்தது”
சாஸ்திரி கவலை:
“ஏனெனில் இங்கிலாந்து பவுலிங் துறையில் சில காயங்கள் இருக்கிறது. அதையும் தாண்டி நீங்கள் அவர்களால் ஊதப்பட்டுள்ளீர்கள். தற்போது இது தொடரை சமன் செய்யும் நேரமாகும். நீங்கள் இரண்டாவது போட்டியில் சென்று உண்மையான போராட்ட குணத்தை காண்பிக்க வேண்டும். நாக் அவுட் பஞ்ச் கொடுப்பதற்கான வாய்ப்பு அடுத்த போட்டியிலேயே வருகிறது”
“ஒருவேளை அந்தப் போட்டியில் உங்களால் பஞ்ச் கொடுக்க முடியாவிட்டால் பின்னர் நீங்கள் மிகவும் கீழே தள்ளப்படுவீர்கள். எனவே பதிலடி கொடுக்க வேண்டும் என்று நினைத்தால் அது உடனடியாக இருக்க வேண்டும். இதை இந்திய அணி உணர வேண்டும்” என்று கூறினார். இதைத் தொடர்ந்து 2வது போட்டி ஜூலை இரண்டாம் தேதி பர்மிங்கம் நகரில் துவங்குகிறது.
The post இந்தியா இதை மட்டும் செய்யலன்னா.. நியூசி, ஆஸியை தொடர்ந்து ஹாட்ரிக் தோல்வி உறுதி.. சாஸ்திரி கவலை appeared first on Cric Tamil.