அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், 2020 ஆம் ஆண்டு அதிபர் தேர்தல் சுழற்சியின் போது வரலாற்றிலேயே மிகப்பெரிய அளவில் தேர்தல் தரவுகள் திருடப்பட்டதாக சீனா மீது மிகக் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
நாட்டிற்கு ஆற்றிய உரையில், இந்தத் தரவு திருட்டின் மூலம் சுமார் 220 மில்லியன் அமெரிக்க வாக்காளர்களின் கோப்புகளை சீனா சட்டவிரோதமாக கைப்பற்றியுள்ளது என்று டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்.
அமெரிக்காவின் 18 மாநிலங்களை சேர்ந்த கோடிக்கணக்கான வாக்காளர்களின் தரவுகள் சீனாவால் வாங்கப்பட்டோ, திருடப்பட்டோ அல்லது ஹேக் செய்யப்பட்டோ இருக்கலாம் என்று அதிபர் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் தேர்தல் உள்கட்டமைப்பில் உள்ள அதிர்ச்சியூட்டும் பலவீனங்களை வெளிப்படுத்தும் முக்கிய உளவுத்துறை தகவல்களை உடனடியாக பகிரங்கப்படுத்தப் போவதாகவும் அவர் தனது உரையின் போது அறிவித்தார்.
அமெரிக்க தேர்தல் தரவுகளை சீனா திருடியதா? அதிபர் டொனால்ட் டிரம்ப் குற்றச்சாட்டு
