பிரதமர் மோடியின் புகழ்பெற்ற அரசியல் திறமை மற்றும் செல்வாக்கு மிக்க உலகளாவிய தலைமைத்துவத்தை அங்கீகரிக்கும் விதமாக, கானாவின் தேசிய விருதான ‘தி ஆஃபீசர் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் தி ஸ்டார் ஆஃப் கானா’ விருது அவருக்கு வழங்கப்பட்டது.
கானாவிற்கு பிரதமர் மோடி மேற்கொண்ட பயணத்தின் போது, இந்த விருதை அதிபர் ஜான் டிராமணி மஹாமா வழங்கினார்.
இந்த உயரிய கௌரவத்திற்கு நன்றியைத் தெரிவித்து, பிரதமர் மோடி Xஇல்,”‘தி ஆபீசர் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் தி ஸ்டார் ஆஃப் கானா’ விருதைப் பெற்றதில் பெருமை” என்று பதிவிட்டார்.
தனது ஏற்புரையில், இந்த விருது ஒரு தனிப்பட்ட சாதனை மட்டுமல்ல, 140 கோடி இந்திய மக்களின் சார்பாக தாம் ஏற்றுக்கொண்டது என்று கூறினார்.
கானாவின் உயரிய விருதை பிரதமர் மோடிக்கு வழங்கி கௌரவம்
