ஆசியாவின் நீர் கோபுரம் என்று அழைக்கப்படும் இந்து குஷ் இமயமலைப் பகுதியில், கடந்த 23 ஆண்டுகளில் இல்லாத அளவிற்குப் பனிப்பொழிவு மிகக் குறைவாகப் பதிவாகியுள்ளது.
2025 நவம்பர் முதல் 2026 மார்ச் வரையிலான காலத்தில், சராசரியை விட 27.8 சதவீதம் பனிப்பொழிவு குறைந்துள்ளதாக ICIMOD அமைப்பின் அறிக்கை எச்சரிக்கிறது.
இது ஆசியாவின் முக்கிய நதிப் படுகைகளை நம்பியுள்ள சுமார் இரண்டு பில்லியன் (200 கோடி) மக்களின் நீர் பாதுகாப்பிற்குப் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.
இமயமலையில் பனிப்பொழிவு வரலாறு காணாத சரிவு: 2 கோடி மக்களின் குடிநீருக்கு ஆபத்தா?
