மகளிர் கிரிக்கெட்டில் கென்னிங்டன் ஓவலில் நடந்த இந்தியா vs இங்கிலாந்து இடையேயான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி சாதனை புத்தகங்களில் தனது பெயரைப் பொறித்தது.
சர்வதேச கிரிக்கெட்டில், ஆடவர் மற்றும் மகளிர் என அனைத்து வடிவங்களிலும் இல்லாத வகையில் உலகில் முதல்முறையாக சாதனை செய்துள்ளது.
முன்னதாக, 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளிலும் இந்தியா வென்றிருந்த நிலையில், மூன்றாவது போட்டியிலும் வென்று தொடரை வெல்லும் முனைப்புடன் களமிறங்கியது.
எனினும், முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணியின் தொடக்க வீராங்கனைகள் சோபியா டன்க்லி மற்றும் டேனியல் வயட்-ஹாட்ஜ் ஆகியோரின் 137 ரன்கள் தொடக்க பார்ட்னர்ஷிப் அணியை வலுவாக்கியது.
25 பந்துகளில் 9 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய மகளிர் கிரிக்கெட் அணி சாதனை
