பாகிஸ்தான் : கனமழை, வெள்ளத்தால் 200 பேர் உயிரிழப்பு!

Estimated read time 1 min read

பாகிஸ்தான் மற்றும் அதன் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் பல பகுதிகளில் கனமழை மற்றும் வெள்ளம் காரணமாகக் கடந்த 24 மணி நேரத்தில் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் கில்கிட்-பால்டிஸ்தானில் திடீர் வெள்ளத்தால் ஏராளமான வீடுகள் இடிந்து விழுந்ததுடன், பள்ளிகள், மருத்துவமனைகள் சேதமடைந்தன.

பஞ்ச்கோரா, ஜீலம் உள்ளிட்ட ஆறுகளில், அபாய அளவை தாண்டி வெள்ளம் பாய்ந்தோடுவதால் ஊருக்குள் மழைநீர் பெருக்கெடுத்து, வாகனங்கள் அடித்துச் செல்லப்பட்டன.

You May Also Like

More From Author