விண்வெளித் துறையில் இந்தியாவின் முன்னேற்றம் சாதாரண குடிமக்களின் வாழ்க்கையை எளிதாக்குகிறது – பிரதமர் மோடி

Estimated read time 0 min read

கடந்த 11 ஆண்டுகளில், விண்வெளித் துறையில் மத்திய அரசு பல சீர்திருத்தங்களைச் செயல்படுத்தியுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

தேசிய விண்வெளி தினத்தை ஒட்டி விஞ்ஞானிகள் மற்றும் அனைத்து இளைஞர்கள் உட்பட விண்வெளித் துறையுடன் தொடர்புடைய அனைவருக்கும் பிரதமர் மோடி வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், தேசிய விண்வெளி தினம் இளைஞர்களிடையே உற்சாகத்தையும் ஈர்ப்பையும் ஏற்படுத்தும் ஒரு நிகழ்வாக மாறியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

விண்வெளித் துறை ஒன்றன்பின் ஒன்றாக மைல்கல்லை எட்டியுள்ளது என்றும் கடந்த 11 ஆண்டுகளில், விண்வெளித் துறையில் அரசாங்கம் பல சீர்திருத்தங்களைச் செயல்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இன்று, இந்தியா கிரையோஜெனிக் என்ஜின்கள் மற்றும் மின்சார உந்துவிசை போன்ற திருப்புமுனை தொழில்நுட்பங்களால் வேகமாக முன்னேறி வருவதாகவும்,

விரைவில் ககன்யான் திட்டத்தைத் தொடங்க உள்ளதாகவும், வரும் காலங்களில், இந்தியா தனது சொந்த விண்வெளி நிலையத்தை உருவாக்கும் என்றும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

விண்வெளித் துறையில் இந்தியாவின் இன்றைய முன்னேற்றம் சாதாரண குடிமக்களின் வாழ்க்கையை எளிதாக்குகிறது என்றும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

Please follow and like us:

You May Also Like

More From Author