பிரதமர் மோடி மொரீசியஸ் பிரதமர் சந்திப்பு – இரு நாடுகள் இடையே முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து!

Estimated read time 0 min read

பிரதமர் மோடி மற்றும் மொரீசியஸ் பிரதமர் நவீன்சந்திர ராம்கூலம் ஆகியோருக்கு இடையேயான சந்திப்பின்போது முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

இந்தியா வந்துள்ள மொரீசியஸ் பிரதமர் நவீன்சந்திர ராம்கூலம் உத்தரப்பிரதேசம் மாநிலம் வாரணாசியில் பிரதமர் மோடியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது இந்தியா மற்றும் மொரிசீயஸ் இடையே சிறப்பு ஆயுஷ் மையம், ஹெலிகாப்டர்கள் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர மோடி, மொரீஷியஸின் வளர்ச்சியில் இந்தியா நம்பகமான மற்றும் முதன்மை பங்காளியாக இருப்பது பெருமைக்குரிய விஷயம் என்று குறிப்பிட்டார்.

மொரீஷியஸின் தேவைகள் மற்றும் முன்னுரிமைகளை மனதில் கொண்டு ஒரு சிறப்புப் பொருளாதாரத் தொகுப்பை அளிக்க முடிவு செய்துள்ளோம் என்றும், . இது உள்கட்டமைப்பை வலுப்படுத்தும், புதிய வேலைவாய்ப்பு வாய்ப்புகளை உருவாக்கும் மற்றும் சுகாதார வசதிகளை வலுப்படுத்தும்” என்றார். அங்கு இந்தியா முதலீடு செய்யும் எனறும் பிரதமர் குறிப்பிட்டார்,

Please follow and like us:

You May Also Like

More From Author