பெங்களூருவில் 12 மணிநேரத்தில் 130 மி.மீ கனமழை: 3 பேர் உயிரிழப்பு  

Estimated read time 0 min read

பெங்களூருவில் கடந்த 12 மணிநேரத்தில் பெய்த கனமழை காரணமாக நகரம் வெள்ளக்காடாக மாறியிருக்கும் நிலையில், மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த நிலையில் வானிலை ஆய்வு மையம், ஆரஞ்சு எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.
பெங்களுருவில் வெள்ளிக்கிழமை இரவு தொடங்கிய மழை, திங்கட்கிழமை காலை 6 மணி வரை தொடர்ந்தது.
130 மி.மீ. அளவிலான மழை பதிவான நிலையில், ஜெயநகர், கோரமங்கலா உள்ளிட்ட பல பகுதிகள் நீரில் மூழ்கின.
தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளில் வெள்ளம் புகுந்ததால் மக்கள் அவதிக்கு உள்ளாகினர்.
மிக்கோ லே அவுட் பகுதியில் மின்சாரம் தாக்கியதில் 63 வயது முதியவர் மற்றும் 12 வயது சிறுவன் உயிரிழந்தனர். வொயிட்பீல்டு பகுதியில் சுவர் இடிந்ததில் 35 வயது பெண் உயிரிழந்தார்.

Please follow and like us:

You May Also Like

More From Author