“6 மாசம்லாம் முடியாது…. 3 மாசத்துல வேணும்” சிறப்பு குழுவில் வாஸ்து நிபுணர்கள்…. கிடுகிடுக்கும் தலைமைச் செயலகம்….!! 

Estimated read time 1 min read

சென்னை தலைமைச் செயலக வளாகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் முதலமைச்சர் விஜய்யின் புதிய அலுவலகத்தை அமைக்கும் பணிகள் மிக வேகமெடுத்து வருகின்றன. இந்நிலையில், முதலமைச்சரின் அலுவலகத்தை விரைவாக இடமாற்றம் செய்வது தற்போது முற்றிலும் உறுதியாகியுள்ளது.

​முன்னதாக, நாமக்கல் கவிஞர் மாளிகையில் புதிய CM அலுவலகத்தை அமைத்து முடிப்பதற்குப் பொதுப்பணித்துறை சார்பில் 6 மாத காலம் அவகாசம் கேட்கப்பட்டிருந்தது. ஆனால், அந்த நீண்ட அவகாசக் கோரிக்கையை அரசு உடனடியாக நிராகரித்துவிட்டது. மாறாக, பணிகளை 3 மாதங்களுக்குள் விரைந்து முடித்துத் தர வேண்டும் எனப் பொதுப்பணித்துறைச் செயலாளர் சுந்தரவல்லி IAS தலைமையில் சிறப்பு அரசுக் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

​இந்த உயர்நிலைக் குழுவில் தனியார் கட்டட வடிவமைப்பாளர்களுடன் சேர்ந்து, வாஸ்து நிபுணர்களும் பங்கேற்றதாகச் சில தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும், வாஸ்து நிபுணர்கள் அந்தக் கூட்டத்தில் உறுதியாகப் பங்கேற்றார்களா அல்லது ஆலோசனைகள் மட்டும் வழங்கினார்களா என்பது குறித்துத் தெளிவான தகவல்கள் இல்லை.

எது எப்படியோ, சுந்தரவல்லி தலைமையிலான குழுவின் இந்த அதிரடி நடவடிக்கையால் முதலமைச்சர் விஜய்யின் அலுவலகம் மிக விரைவிலேயே புதிய இடத்திற்கு மாறப்போவது மட்டும் உறுதியாகியுள்ளது.

 

You May Also Like

More From Author