பயங்கரவாத அமைப்பை மீண்டும் கட்டமைக்க கொடுக்கும் பாகிஸ்தான்  

Estimated read time 1 min read

இந்திய விமானப்படை மே 7 ஆம் தேதி தொடங்கிய ஆபரேஷன் சிந்தூர் வான் தாக்குதலில், பாகிஸ்தானில் உள்ள மார்க்கஸ் தொய்பா தலைமையகத்தை லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பு மீண்டும் கட்டி வருகிறது.

பயங்கரவாத உள்கட்டமைப்பை மீண்டும் உருவாக்க, பாகிஸ்தான் அரசின் நிதியைப் பயன்படுத்துவதாகவும், வெள்ள நிவாரணத்திற்காக வழங்கப்படும் தொகையை இந்த அமைப்பு திசை திருப்புவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

தாக்குதலில் முழுமையாகச் சேதமடைந்த இந்தக் கட்டடங்களை இடிக்கும் பணி ஆகஸ்ட் 18 அன்று தொடங்கியது.
பல கனரக வாகனங்களைப் பயன்படுத்தி, மார்க்கஸ் தொய்பா வளாகம் செப்டம்பர் 7 ஆம் தேதிக்குள் முழுமையாக இடிக்கப்பட்டது.

இதன் சிதைவுகளை அகற்றும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. விரைவில் மறுசீரமைப்புப் பணிகள் தொடங்கப்பட உள்ளன.

Please follow and like us:

You May Also Like

More From Author