ரிசர்வ் வங்கியின் சூப்பர் அறிவிப்பு…. இனி CHEQUE பணமா மாற வெறும் 3 மணி நேரம் தான்

Estimated read time 1 min read

ரிசர்வ் வங்கி (RBI) சமீபத்தில் அறிவித்துள்ளபடி, 2026 ஜனவரி 3 முதல், வங்கிகளில் செலுத்தப்படும் காசோலைகள் அதே நாளில் 3 மணி நேரத்தில் சரிபார்க்கப்பட்டு, சில மணி நேரத்தில் கணக்கில் பணம் வரவு வைக்கப்படும்.

முன்பு ஒரு அல்லது இரண்டு நாட்கள் ஆகியது; இப்போது வேகமாக பணம் கிடைக்கும். காலை 10 மணி முதல் மதியம் 4 மணி வரை காசோலை வைக்கலாம், ஒவ்வொரு மணி நேரமும் சரிபார்ப்பு நடக்கும். வங்கி சரி செய்யாவிட்டாலும், தானாக பணம் கணக்கில் வரும். இது வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சியையும், பயனையும் தரும்.

இந்த மாற்றம் வணிகர்களுக்கும் பொதுமக்களுக்கும் பணத்தை விரைவாக பெற உதவி, மோசடியை குறைக்கும். ரூ.5 லட்சத்துக்கு மேல் காசோலைகளுக்கு Positive Pay கட்டாயமாகும், ரூ.50,000க்கு மேல் பரிந்துரைக்கப்படுகிறது. வங்கி SMS மூலம் தகவல் அனுப்பும். இருப்பினும், UPI, NEFT போன்ற டிஜிட்டல் முறைகள் இன்னும் வேகமாக இருப்பதால் அவற்றை பயன்படுத்தலாம். RBI வங்கிகளை தயாராக வைத்து, மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துகிறது, இது பண பரிவர்த்தனையை எளிதாக்கும்.

Please follow and like us:

You May Also Like

More From Author