சபரிமலை பக்தர்களுக்கு மகிழ்ச்சி செய்தி: தமிழ்நாட்டிலிருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கம்  

Estimated read time 1 min read

கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடைபெறும் மண்டல பூஜை மற்றும் மகர விளக்குத் திருவிழாக்களில் கலந்துகொள்ளும் தமிழக பக்தர்களுக்கு வசதியாகத் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் சிறப்புப் பேருந்துகளை இயக்க உள்ளது.
ஆண்டுதோறும் நடைபெறும் இந்தச் சேவை, இந்த ஆண்டும் நவம்பர் 16 ஆம் தேதி முதல் தொடங்கப்பட்டுள்ளது.
இந்தச் சிறப்புப் பேருந்துகள் சென்னை (கோயம்பேடு மற்றும் கிளாம்பாக்கம்), திருச்சி, மதுரை மற்றும் புதுச்சேரி / கடலூர் ஆகிய முக்கிய நகரங்களிலிருந்து பம்பைக்கு இயக்கப்படுகின்றன.
பக்தர்களின் வசதிக்காக அதிநவீன சொகுசு மிதவைப் பேருந்துகள் (Ultra Deluxe), குளிர்சாதனப் பேருந்துகள் (AC) மற்றும் குளிர்சாதனமில்லா இருக்கை மற்றும் படுக்கை வசதி கொண்ட பேருந்துகள் (NSS) இயக்கப்படுகின்றன.

Please follow and like us:

You May Also Like

More From Author