கூட்டுச் சாதனை மற்றும் செழுமையைப் பகிர்ந்துகொள்ளும் சீனாவும் அமெரிக்காவும்

 

சீன-அமெரிக்க அரசுத் தலைவர்கள் அக்டோபர் 30ஆம் நாள், தென் கொரியாவில் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சீன-அமெரிக்க உறவுக்கான நெடுநோக்குத் தன்மை வாய்ந்த பிரச்சினைகள், பொது அக்கறை கொண்ட முக்கியப் பிரச்சினைகள் முதலியவை குறித்து இரு தரப்பினரும் ஆழமான முறையில் கருத்துக்களைப் பரிமாறிக்கொண்டனர். சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங், சீன-அமெரிக்க உறவின் எதிர்கால வளர்ச்சிக்கு வழிகாட்டினார். 1 மணி 40 நிமிடங்கள் நீடித்த சீன-அமெரிக்க அரசுத் தலைவர்களின் சந்திப்பானது மைல்கல் முக்கியத்துவம் வாய்ந்தது என்று சர்வதேச ஊடகங்கள் செய்திகளையும் விமர்சனங்களையும் வெளியிட்டு கருத்து தெரிவித்துள்ளன. சீன-அமெரிக்க உறவு, உலகளவில் மிக முக்கியமான இரு தரப்புறவுகளில் ஒன்றாகும்.  சீன-அமெரிக்க உறவின் சீரான, நிதானமான, சொடர்ச்சியான வளர்ச்சி, இரு நாடுகளின் பொது நலன்கள் மற்றும் சர்வதேசச் சமூகத்தின் பொது எதிர்பார்ப்புக்குப் பொருந்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

 

சீன-அமெரிக்க உறவில் இரு நாட்டு அரசுத் தலைவர்களின் தூதாண்மை தொடர்பு ஈடு இணையற்ற நெடுநோக்கு வழிகாட்டலை வழங்கியுள்ளது. இவ்வாண்டு முதல் தற்போது வரை, இரு நாட்டு அரசுத் தலைவர்களும் 3 முறை தொலைபேசி வழியிலும், பலமுறை கடிதங்கள் மூலமும் பரிமாற்றம் மேற்கொண்டுள்ளனர். இத்தொடர்பானது சீன-அமெரிக்க உறவின் ஒட்டுமொத்த நிதானத்திற்குக் கூட்டாக வழிகாட்டியுள்ளது. 6 ஆண்டுகளுக்குப் பின் நடைபெற்ற இரு நாட்டு அரசுத் தலைவர்களின் இப்பேச்சுவார்த்தையானது, அமெரிக்க அரசுத் தலைவர் டிரம்பின் 2வது பதவிக்காலத்தில் இரு தரப்பினர்களுக்கிடையில் நடைபெற்ற முதல் சந்திப்பாகவும் உலகளவில் அதிகக் கவனத்தை ஈர்த்த சந்திப்பாகவும் அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Please follow and like us:

You May Also Like

More From Author