தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் புயல் சின்னம் உருவாக வாய்ப்புள்ளதையடுத்து, தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 23) நான்கு தென் மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தெற்கு அந்தமான் கடல் பகுதியில் சனிக்கிழமை உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அதே இடத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக நிலைகொண்டுள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, திங்கட்கிழமை காற்றழுத்த தாழ்வு மண்டலமாகத் தீவிரமடைய வாய்ப்புள்ளது.
அதன் பிறகு, அடுத்த 48 மணி நேரத்தில் இது தென்கிழக்கு வங்கக்கடலில் புயலாக வலுப்பெறக் கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
தென் தமிழகத்தின் 4 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலெர்ட்
