இளையராஜா பிறந்தநாள் : மத்திய அமைச்சர் எல்.முருகன் வாழ்த்து!

இன்று பிறந்த நாள் கொண்டாடும் இளையராஜாவுக்கு மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள செய்தியில் குறிப்பிட்டுள்ளதாவது : “கல் மனது கொண்டோரையும் கரைக்கும் தன்மை கொண்டது இசை. ஐந்து தசாப்தங்களுக்கும் மேலாக, தன்னுடைய இசையின் வாயிலாக உலகம் முழுவதும் உள்ள இசை ரசிகர்களை சிறை பிடித்து வைத்திருக்கிறார், நமது இசைஞானி இளையராஜா.

கோபம், தனிமை, சோகம் போன்ற மனிதனின் ஒவ்வொரு ஆற்றாமைக்கும் ஆகச்சிறந்த மருந்தாய் விளங்குகிற இசைக்கு சொந்தக்காரர், மதிப்பிற்குரிய திரு.இளையராஜா அவர்கள், எந்தவொரு நோய் நொடியின்றி நீடூழி வாழ கடவுளிடம் வேண்டிக் கொள்கிறேன் என எல்.முருகன் கூறியுள்ளார்.

Please follow and like us:

You May Also Like

More From Author