நல்லகண்ணு மருத்துவமனையில் அனுமதி

Estimated read time 0 min read

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு(100) மூச்சுத் திணறல் காரணமாக இன்று அதிகாலை சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவ குழுவினர் தீவிர சிகிச்சை அளித்துவருகின்றனர். கடந்த ஆகஸ்ட் 22 ஆம் தேதி வீட்டில் தவறி விழுந்த நல்லகண்ணு முதலில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதன்பின் சென்னை ராஜீவ்காந்த் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பின் அக்டோபர் 10 ஆம் தேதி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பினார் என்பது குறிபிடதக்கது.

Please follow and like us:

You May Also Like

More From Author