“மூகநீதி வரலாற்றின் சாதனை மைல்கல் இன்று..!! திமுகவுக்கு கிடைத்த வெற்றி இது” – மு.க.ஸ்டாலின் பெருமிதம்..

Estimated read time 1 min read

அகில இந்திய மருத்துவ மாணவர் சேர்க்கையில் 27% இட ஒதுக்கீட்டின் கீழ் 20,088 இடங்கள் நிரப்பப்பட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

இந்திய அளவில் இதர பிற்படுத்தப்பட்ட(ஓபிசி) பிரிவினருக்கு மருத்துவ மாணவர் சேர்க்கையில் 27 விழுக்காடு இடஒதுக்கீடு , பெரும் சட்டப்போராட்டத்திற்கு பிறகு பெறப்பட்ட நாளாகும் இன்று (ஜூலை 29). இதனை சமூகநீதி வரலாற்றின் சாதனை மைல்கல் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார். இதுகுறித்த அவரது எக்ஸ் தள பதிவில், “20,088 இடங்கள் = பல குடும்பங்களின் பல தலைமுறைக் கனவு! சதிக்குக் கால் முளைத்துச் சாதியாகி உழைக்கும் மக்களை ஒடுக்கினாலும், விதி வலியது – இதுதான் நம் தலையில் எழுதியது எனச் சுருண்டுவிடாமல், போராடி பெறும் உரிமைகளால் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் நமக்கான இடங்களை உறுதிசெய்கிறோம்!

சமூகநீதிக்கான இந்த அரசியலையும் – போராட்டத்தையும் நாம் மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டே இருக்க வேண்டும். நம் விரல்களைக் கொண்டே நம் கண்களைக் குத்தும் வித்தையறிந்தவர்கள் செய்யும் சூழ்ச்சி அரசியலை முறியடிக்க, இந்நாளின் வரலாற்று முக்கியத்துவத்தை உரக்கச் சொல்வோம்!” என்று குறிப்பிட்டுள்ளார்.

You May Also Like

More From Author